search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபரி நீர்"

    • திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
    • மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து அணைகளில் இருந்து மதகுகள் வழியாகவும், உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது.

    அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதனால் நேற்று பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது. சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகளில் இருந்து மட்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று அந்த அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

    உபரி நீர் திறக்கப்படாததால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான அளவில் தண்ணீர் செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் மிதமாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து விடுமுறை நாளான நேற்று பகலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். ஒரு வார காலத்திற்கு பிறகு அங்கு குளிக்க அனுமதி வழங்க்ப்பட்ட நிலையில், பேரூராட்சி சார்பில் சுகாதார பணிகளும் செய்யப்பட்டன.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.99 அடியாக இருந்தது. அணைக்கு 354 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.09 அடியாக உள்ளது. அணைக்கு 360 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 15.78 அடியாக உள்ளது. அணைக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 15.87 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது.

    • கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை
    • குமரி மாவட்டம் முழுவதும் மழை நீடிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது.இன்று காலையிலும் ஒரு சில இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.அங்கு அதிகபட்சமாக 57.8 மில்லிமிட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதி களிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.அணைக்கு வரக்கூடிய தண்ணீ ருக்கு ஏற்ப அணையிலி ருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆறு, பரளியாறு கோதை யாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகி றார்கள். திற்பரப்பு அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப் பட்டு உள்ளது.

    பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 42.27 அடியாக உள்ளது. அணைக்கு 1437 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1066 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.70 அடியாக உள்ளது. அணைக்கு 842 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 1864 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.93 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.20 அடியாக உள்ளது.

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் ழுழுவதும் 750 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகிறார்கள். தெரிசனங்கோப்பு, அரும நல்லூர், பூதப்பாண்டி சுசீந்திரம் பகுதிகளில் கும்பப்பூ சாகுபடி நடந்து வருகிறது.

    • சுமார் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி தீவிரமடைந்து வருகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாகும். இந்த அணை யில் உள்ள ஆற்று பாசனம் மற்றும் முதன்மை கால்வாய் பாசனம் மூலம் சுமார் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின்மூலம் சுமார் 78-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக இந்த அணையில் நீர்பிடிப்பு பரப்பில் ஆக்கிரமிப்பு இருப்பதாலும், அணையின் நீர்பிடிப்பு பகுதி மண்ணால் தூர்ந்து போய் உள்ளதாலும் அதிகளவு நீரை மழை காலத்தில் சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்த போதிலும் மிக குறைந்த அளவு நீரை மட்டுமே சேமித்து வைக்க முடிகிறது. இதனால் ஒரு போக விளைச்சலுக்கு மட்டுமே பயன்படுகிறது. இந்நிலையில் கடந்த 29-ந் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கல்வராயன்மலை பகுதியில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    மேலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது 42.2 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடி என்ப தால் இன்னும் அணை நிரம்ப 3.8 அடி மட்டுமே உள்ளது. கோமுகி அணை முன்கூட்டியே நிரம்பி வருவதால் பருவ மழையின் போது அடிக்கடி அணை திறக்கவும், அதனால் கோமுகி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி 360 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் 220 கனஅடி உபரி நீர் இன்று வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரை யோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள தால் பொதுமக்கள் அனை வரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு:- கள்ளக்குறிச்சியில் 20, தியாகதுருகம் 30, விருகாவூர் 25, சின்னசேலம் 12, அரியலூர் 38, கடுவனூர் 46, கலையநல்லூர் 28, கீழ்பாடி 7, மூரார்பாளையம் 37, மூங்கில்துறைப்பட்டு 27, ரிஷிவந்தியம் 15, சூளாங்குறிச்சி 46, வடசிறுவலூர் 32, மாடாம்பூணடி 9, மணலூரபேடடை 39, திருக்கோவிலூர் 21, திருப்பாலபந்தல் 15, வேங்கூர் 14, ஆதூர் 7, எறையூர் 6, ஊ.கீரனூர் 13 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கடுவனூர் மற்றும் சூளாங்குறிச்சியில் 46 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக எறையூரில் 6 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 487 மி.மீட்டராகவும், சராசரி 23.20 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.

    • காவிரியாற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு ஏரிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.
    • காவிரி நீர் காளிப்பட்டி வந்தடைந்தது பா.ம.க.வினர் மலர்கள் தூவி வரவேற்றனர்.

    மேட்டூர்:

    மேட்டூரைஅடுத்த திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள உபரி நீர் திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து நேற்று காலை காவிரியாற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு ஏரிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வந்தடைந்தது.

    இதனை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி யினர் மலர்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர.

    இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜ சேகரன், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜசேகரன், கொளத்தூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் துரைராஜ், மேச்சேரி ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி, பா.ம.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் துரைராஜ் ,சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    ×